2024 ஆம் ஆண்டுக்கான பட்டினி குறியீடு அறிக்கையில் இந்தியா 105வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
சமீபத்தில் 127 நாடுகளில் நடத்திய பட்டினி குறியீடு ஆய்வின் அடிப்படையில், இந்தியா தீவிர பட்டினி பிரச்சினைகள் கொண்ட நாடாக இருக்கிறது. மேலும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டும், வளர்ச்சி குன்றும் விகிதமும் அதிகரித்துள்ளது. 35.5% குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர், மற்றும் 2.9% ஐந்துக்கு கீழ் குழந்தைகள் இறப்பு விகிதம் உள்ளது. முன்னதாக மத்திய அரசு இதுவரை வெளிவந்த பட்டினி குறியீட்டு அறிக்கைகளை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.














