சென்னையில் வரும் 7,8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 7, 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் 5.5 லட்சம் கோடிக்கான முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தை 2030க்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ளார். அந்த அடிப்படையில் தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. முன்னதாக சிறு , குறு தொழில்துறை சார்பில் மாவட்டம் தோறும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நடத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மாநாட்டிற்காக வர்த்தக மைய வளாகத்தில் புதிய கட்டிடம் தயாராகி வருகிறது. இதில் பல நவீன வசதிகள் உண்டு.