உலகிலேயே முதல் 3டி வடிவமைப்பு கொண்ட கோவில் உருவாக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத், சித்தி பேட்டை முருகுப்பள்ளியில் 3டி வடிவிலான முதன்மையான கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது சுமார் 4000 சதுர அடி பரப்பில் 35.5 அடி உயரம் கொண்ட மூன்று கோபுரங்களை கொண்டுள்ளது. இந்த தனித்துவமான பிரிண்ட்டை எடுக்க சுமார் மூன்று மாதங்கள் ஆகியது. இதனை கட்டி முடிக்க ஆறு மாத காலம் தேவைப்பட்டது. இதில் விநாயகருக்கு கருவறையும், சிவபெருமானுக்கு ஒரு கருவறையும், பார்வதி தேவிக்கு தாமரை வடிவில் ஒரு கருவறையும் என மூன்று கருவறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் இதில் 3டி பிரிண்ட் வசதியுடன் உள்நாட்டு பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. லியோ பில்லஸ் மூலம் ஸ்லாப்கள் மற்றும் தரை வழக்கமான தொழில்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது மழை, பனி, நிலநடுக்கம் என எந்த வகையான சீற்றங்களையு தாங்கக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.