பெர்லின் நாட்டில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நீர் வாழ் காட்சி சாலை நேற்று வெடித்து சிதறி உள்ளது.
இந்த நீர் வாழ் காட்சி சாலை, 52 அடி உயரம் உள்ளதாகும். இதில், 1500 க்கும் மேற்பட்ட அரிய வகை மீன்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. பெர்லின் நேரப்படி, அதிகாலை 6 மணிக்கு, எதிர்பாராத விதமாக இந்த அக்குவாரியம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில், ஒட்டுமொத்த கட்டிடமும் சேதமடைந்தது. கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகங்கள், பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவையும் மிகுந்த சேதம் அடைந்தன. அக்வாரியத்தில் நிரப்பப்பட்டிருந்த 10 லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் ஆறாக ஓடியது. மேலும், அதில் பாதுகாக்கப்பட்டிருந்த மீன்கள் முழுவதுமாக இறந்து விட்டன.
உலகிலேயே, உருளை வடிவில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அக்வாரியம் இதுவாகும். இந்த விபத்து ஏற்பட்ட போது, அதிகாலை நேரம் என்பதால், மனித உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இங்கு மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.