சூரியனின் ஆற்றலை ஈடு செய்யும் விதமாக உலகின் சக்தி வாய்ந்த லேசர் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனையை ரோமானிய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
சூரியனிலிருந்து பூமிக்கு கிடைக்கும் ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு ஆற்றல் கொண்ட லேசர் ஒளியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனை சோதனை செய்யும் போது, அறையில் எந்தவித வெடிப்புகளும் நிகழவில்லை. மேலும், எந்த சத்தமும் பதிவாகவில்லை. கருப்பு திரையில் லேசர் ஒளி தெளிவாக கிடைக்கப்பெற்றது. இதன் அளவு 10 பீட்டா வாட்ஸ் அல்லது 10 குவாட்டரில்லியன் வாட்ஸ் ஆகும். இது பல்வேறு துறைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக, சுகாதாரத்துறை முதல் விண்வெளி துறை வரை அனைத்து துறைகளிலும் இந்த லேசரின் தாக்கம் பதிவாகும். - இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.