அண்மையில் எர்த்'ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று, கடல் நீர் மட்டம் எதிர்பார்ப்பை விட வேகமாக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட நாசாவின் ICESat-2 lidar செயற்கைக்கோள் மூலம் கடல் நீர் மட்ட உயர்வு குறித்து ஆராயப்பட்டது. இதற்கு முன்னர் ரேடார் தொழில்நுட்பம் கொண்டு ஆராயப்பட்ட கடல் நீர்மட்ட உயர்வு, தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் ஆராயப்படுகிறது. இதில், பல கடற்கரை பகுதிகள் விஞ்ஞானிகள் நினைத்ததை விட குறைவான உயரத்தில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இதற்கு முன்னர் கணிக்கப்பட்ட காலத்தை விட விரைவாகவே கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவது உறுதியாகி உள்ளது.
லிடார் செயற்கைக்கோள் ஆய்வுகள் படி, 2 மீட்டர் கடல் நீர் உயர்வதால், 2.4 மடங்கு நிலப்பகுதி கடலுக்குள் செல்லும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, 2 மீட்டர் உயரும் கடல் நீர், பேங்காங் நகரின் பெரும்பாலான பகுதிகளை மூழ்கடிக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடல் நீர் மட்டத்திற்கும் கீழ் வசிக்க நேரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.