பெண் கிரிக்கெட் வீராங்கனைகளைக் கொண்ட அணிகளான டபிள்யூபிஎல் என்னும் போட்டி தொடருக்கான ஏல தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் நடைபெறும் 20 - 20 ஐபிஎல் தொடரை போல பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான டபிள்யூபிஎல் எனும் போட்டி தொடர் பிசிசிஐ மூலம் இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், யூ பி வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் ஐந்து அணிகள் பங்கு பெறுகின்றன. இதில் முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் 12 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இறுதியில்
மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது. மேலும் 2023 காண பரிசுத்தொகை ரூபாய் 10 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து 2024 ஆம் ஆண்டுக்கான ஏலம் டிசம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறும் இந்த ஏலத்தில் ஐந்து அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு உரிய ஒன்பது இடங்களும் அடங்கும்.