ஷாவ்மி நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. இந்த நிலையில், புதிதாக ஷாவ்மி 14 வரிசை கைபேசிகள் அறிமுகமாகி உள்ளன.
உலக அளவில் மூன்றாவது பெரிய கைப்பேசி உற்பத்தியாளராக சீனாவை சேர்ந்த ஷாவ்மி உள்ளது. இந்த நிலையில், ஷாவ்மி 14 வரிசை கைபேசிகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் 2 வேரியண்ட்டுகளில் ஷாவ்மி 14 வரிசை கைபேசிகள் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் இது 75000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கருதப்படுகிறது. கைபேசி தவிர, புதிதாக டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றையும் ஷாவ்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. விரைவில், பார்சிலோனாவில் கைப்பேசிகளுக்கான உலக மாநாடு நடைபெற உள்ள சூழலில், இந்த புதிய வரவு சாதனங்கள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன.