இஸ்ரோ உருவாக்கிய எக்ஸ்போசாட் (XpoSat) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை 9:10 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவு தளத்திலிருந்து எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. பி எஸ் எல் வி சி 58 ராக்கெட்டில் இந்த செயற்கைக்கோள் சுமந்து செல்லப்பட்டது. அதன்படி, பிஎஸ்எல்வி ராக்கெட், தனது 60வது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பூமியிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் தொலைவில், 6 டிகிரி சாய்வு கோணத்தில், எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பூமி சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள், எக்ஸ் ரே தொழில்நுட்பத்தின் மூலம் விண்வெளி ஆய்வில் ஈடுபட உள்ளது. குறிப்பாக, கருந்துளைகள் மற்றும் நெபுலா போன்றவற்றை ஆராய்வதற்காக இந்த செயற்கைக்கோள் செலுத்த பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு, இந்த செயற்கைக்கோள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் என இஸ்ரோ கூறியுள்ளது.