சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிய பிறகு, இஸ்ரோ, எக்ஸ்போ சாட் விண்வெளி திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
X-ray polarimeter satellite - XPoSat என்று அழைக்கப்படும் இந்த திட்டம், இந்தியாவின் முதல் போலரிமெட்டரி திட்டம் ஆகும். மேலும், உலக அளவில், இது நாசாவுக்கு அடுத்தபடியாக திட்டமிடப்பட்டுள்ள போலரிமெட்டரி திட்டமாகும். நாசா, கடந்த 2021ல் இந்த திட்டத்தை நிறைவேற்றியது. இந்தியா, அடுத்த சில மாதங்களில், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோளை செலுத்த உள்ளது. இது விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதில் இருந்து 5 ஆண்டுகளுக்கு பணி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம், பிரபஞ்சத்தில் உள்ள பல்வேறு விண்பொருட்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.