யஷ்வந்த் கோரிசென் மலை உச்சிக்கு ஏறி சாதனை படைத்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம், மெகபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்வந்த், கடந்த மாதம் 19-ந் தேதி, 6,488 மீட்டர் உயரமுள்ள கோரிசென் மலைக்கு ஏறி உச்சிக்கு சென்றார். இந்த மலையை ஏறிய முதல் கல்லூரி மாணவராக மாறியுள்ளார். யஷ்வந்த் மலையின் உச்சியில் சென்று இந்திய தேசிய கொடியை நாட்டினார். மேலும் பெண்கள் மற்றும் சமுதாயத்துக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் நோக்கில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை அடையவும் அவர் திட்டமிட்டுள்ளார்.