கேரளாவில் கடும் வெயில் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மின் தேவை அதிகமானதால் மின் பகிர்வில் கட்டுப்பாடுகளை கேரளா மின்வாரியம் மேற்கொண்டுள்ளது. தற்போது வெப்பத்தின் தாக்கம் பல மாவட்டங்களில் தொடர்ந்து வருவதால் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது