கேரளாவில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மாதம் முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் அடுத்து ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் ஐந்தாம் தேதி எர்ணாகுளம்,கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர சில மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.