டெல்லியில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு 

டெல்லியில் கனமழை காரணமாக இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் கடந்த 27ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், யமுனா நகர், குருசேத்திரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் டெல்லியில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் […]

டெல்லியில் கனமழை காரணமாக இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லியில் கடந்த 27ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, காஜியாபாத், நொய்டா, ஃபரீதாபாத், யமுனா நகர், குருசேத்திரா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் டெல்லியில் உள்ள பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் கனமழை காரணமாக இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடைமழை காரணமாக வழக்கமாக பதிவாகும் வெப்பநிலையை விட 6 டிகிரி செல்சியஸ் குறைவாக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu