எஸ் பேங்க் காலாண்டு முடிவுகள் வெளியீடு - பங்குகள் 8% உயர்வு

April 29, 2024

எஸ் பேங்க் நான்காம் காலாண்டு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 124% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், எஸ் வங்கியின் நிகர லாபம் 454 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 2.3% உயர்ந்து 2153.1 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் 902.47 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு […]

எஸ் பேங்க் நான்காம் காலாண்டு முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி, வங்கியின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 124% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில், எஸ் வங்கியின் நிகர லாபம் 454 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. வங்கிக்கு வட்டி மூலமாக கிடைத்த வருவாய் 2.3% உயர்ந்து 2153.1 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் 902.47 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு அறிக்கையை வெளியிட்டு பேசிய எஸ் பேங்க் தலைமை அதிகாரி பிரசாந்த் குமார், வங்கியின் வைப்புத் தொகையில் 18.5% மற்றும் கடன் வழங்கலில் 17% அளவுக்கு உயர்வை எதிர்நோக்குவதாக கூறினார். அதன்படி, கடந்த மார்ச் மாத இறுதியில், வங்கியின் கடன் வழங்கல் 12.1% மற்றும் வாய்ப்பு நிதி 22% உயர்வை பதிவு செய்துள்ளது. இதன் விளைவாக, இன்றைய வர்த்தக நாளின் இடையில், கிட்டத்தட்ட 8% அளவுக்கு எஸ் பேங்க் பங்குகள் உயர்ந்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu