சவுதி அரேபியாவில் முதன்முறையாக சான்றளிக்கப்பட்ட யோகா ஆசிரியை எகிப்து, ஏமன் உள்பட 11 அரபு நாட்டு குழுவினர்களுக்கு பயிற்சிகளை வழங்கி உள்ளார்.
சவுதி அரேபியாவில் அனைத்து சமூக பிரிவினரின் வாழ்க்கை நடைமுறைகளில் ஒன்றாக யோகாவை கொண்டுவர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், அரபு இளையோர் அதிகாரமளித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, விளையாட்டு அமைச்சகம் கடந்த 22-ந்தேதி தொடங்கி வருகிற 30-ந்தேதி வரையிலான யோகா பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இதற்காக 11 அரபு நாடுகளை சேர்ந்த குழுவினர் வருகை தந்துள்ளனர். இதன்படி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், ஏமன், பாலஸ்தினம், எகிப்து, லிபியா, அல்ஜீரியா, மொராக்கோ, துனீசியா மற்றும் மொரீசானியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.