குறுகிய துாரம் பயணம் செய்வோர் சாதாரண டிக்கெட் எடுத்தாலும், விரைவு ரயில்களின் ஒரு சில முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளாவுக்கு செல்லும் மொத்தம் 24 விரைவு ரயில்களில் ஓரிரு 'டிரிசர்வ்டு' பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், விரைவு ரயில்களில், 'டிரிசர்வ்டு' பெட்டிகள் வசதி பல மாதங்களாக உள்ளது. தினமும் ரயிலில் பயணிப்போருக்கு, இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிகபட்சம் 100 கி.மீ., துாரம் வரையில் பயணிக்கலாம். சாதாரண கட்டணத்துடன் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
பயணியர் 'டிரிசர்வ்டு' அல்லாமல் வழக்கமான முன்பதிவு பெட்டிகளில் உரிய டிக்கெட் இன்றி பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.