மெட்ரோ ரெயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் பெயரை விரும்பிய வண்ணங்களில் எழுதிக் கொள்ளலாம்

March 10, 2023

மெட்ரோ ரெயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் பெயரை விரும்பிய வண்ணங்களில் எழுதிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், இதுவரை பல மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவன பெயரை இணைப்பதற்கான உரிமையை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. கீழ்ப்பாக்கம், நந்தனம், ஏஜி-டி.எம்.எஸ்., அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், திருமங்கலம், ஐகோர்ட்டு, அண்ணா நகர் டவர், கிண்டி, ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைக்கும் உரிமையை […]

மெட்ரோ ரெயில் நிலையத்தில் தனியார் நிறுவனத்தின் பெயரை விரும்பிய வண்ணங்களில் எழுதிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், இதுவரை பல மெட்ரோ ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவன பெயரை இணைப்பதற்கான உரிமையை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. கீழ்ப்பாக்கம், நந்தனம், ஏஜி-டி.எம்.எஸ்., அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், திருமங்கலம், ஐகோர்ட்டு, அண்ணா நகர் டவர், கிண்டி, ஆயிரம் விளக்கு ஆகிய ரெயில் நிலையங்களில் தங்கள் நிறுவனத்தின் பெயரை இணைக்கும் உரிமையை தனியார் நிறுவனங்கள் பெற்றுள்ளன. அதிக நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால் மேலும் பல ரெயில் நிலையங்கள் விரைவில் இந்த பட்டியலில் சேரும். மேலும் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் தங்கள் விருப்பப்படி புதிய வண்ணங்களை அடித்துக் கொள்ளலாம். இவை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வருவாயை கணிசமாக அதிகரிக்க உதவுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu