பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் பெலிக்ஸ் ஜெரால்டு ஆசிரியராக இருக்கும் யூடியூப் சேனலுக்கு சவுக்கு சங்கர் பேட்டி அளித்திருந்தார். இதனால் பெலிக்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்து போலீசார் செய்து சிறையில் அடைத்தனர்.இதில் ஜெரால்டு- க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி இவர் ஆறு மாதங்களுக்கு திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த வழக்கில் ஜாமீன் கிடைக்கும் வரை சிறையில் இருந்து வெளியே வர முடியாது