இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு உளவுத்துறை தகவலின்படி இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையே இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் ராஜீவ் குமாருக்கு உளவுத்துறை அளித்துள்ள தகவல் படி இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் படி ராஜீவ் குமாருக்கு மத்திய அரசு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. அதன்படி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் இவருக்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.