ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 2000 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளனர். பொது பங்குகள் விநியோகிப்பதன் மூலமாகவோ, வேறு வகையிலோ நிதி திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட கட்டங்களாக இந்த நிதி திரட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஜீ நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சந்திப்பில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 2000 கோடி ரூபாய் நிதி திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சோனி நிறுவனத்துடனான 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இணைப்பு நிறுத்தப்பட்டது. அதை அடுத்து, ஜீ நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்ட முடிவுகள் இந்த சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ளன. ஜீ நிறுவனத்தின் அறிவிப்பால் இன்றைய வர்த்தகத்தில் 5% அளவுக்கு நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்தது.