ஜீ நிறுவன பங்குகள் 5% வீழ்ச்சி

February 28, 2024

ஜீ மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களின் 10 பில்லியன் மதிப்பிலான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதன் விளைவாக, ஜீ நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 5% அளவுக்கு ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜீ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 165 ரூபாய் அளவில் இருந்தது. நேற்று, பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், ஜீ நிறுவனம், சுயாதீன ஆலோசனை […]

ஜீ மற்றும் சோனி ஆகிய நிறுவனங்களின் 10 பில்லியன் மதிப்பிலான இணைப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இதன் விளைவாக, ஜீ நிறுவனத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில், இன்றைய வர்த்தக நாளில் கிட்டத்தட்ட 5% அளவுக்கு ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜீ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 165 ரூபாய் அளவில் இருந்தது.

நேற்று, பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில், ஜீ நிறுவனம், சுயாதீன ஆலோசனை குழுவின் பங்களிப்பை அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக, குழுவின் விசாரணை அதிகாரத்தை கூட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், குழுவின் பெயரை சுயாதீன விசாரணை குழு என மாற்றியமைத்துள்ளதாக கூறியுள்ளது. ஜீ நிறுவனத்தின் பங்குகள் இன்று வீழ்ச்சி அடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu