வங்கதேசத்தில் கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டன

August 21, 2024

வங்கதேசத்தில் கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது ஊழல் வழக்கில் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலிதா ஜியா சிறைவைக்கப்பட்டிருந்தார். அதையடுத்து வழக்குகள் தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் இருந்து கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டம் காரணமாக தனது பதவியை ஹசீனா ராஜினாமா செய்தார். அதையடுத்து இடைக்கால அரசு முகமது யூனிஸ் தலைமையில் ஏற்பட்டது. அதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா […]

வங்கதேசத்தில் கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின்போது ஊழல் வழக்கில் வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் கலிதா ஜியா சிறைவைக்கப்பட்டிருந்தார். அதையடுத்து வழக்குகள் தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் இருந்து கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டம் காரணமாக தனது பதவியை ஹசீனா ராஜினாமா செய்தார். அதையடுத்து இடைக்கால அரசு முகமது யூனிஸ் தலைமையில் ஏற்பட்டது. அதையடுத்து முன்னாள் பிரதமர் கலிதா ஜியா வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து 17 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கலிதா ஜியாவின் வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட்டது. இந்த உத்தரவை இடைக்கால அரசு வங்கிகளுக்கு நேற்று பிறப்பித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu