சொந்த முயற்சியில் உருவான இந்தியாவின் பணக்கார பெண்மணிகள் பட்டியலை ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ளது. இதில் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ராதா வேம்பு ₹47,500 கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
ராதா வேம்புவை தொடர்ந்து, நைக்கா நிறுவனத்தின் பால்குனி நாயர் மற்றும் அரிஸ்டா நெட்வொர்க்ஸ்-ன் ஜெயஸ்ரீ உல்லால் ஆகியோர் ₹32,000 கோடியைத் தாண்டிய சொத்து மதிப்புடன் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றனர். லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் நேஹா பன்சால், சொந்த முயற்சியில் உருவான இந்தியாவின் இளம் பணக்கார பெண் என்ற பெருமையை பெறுகிறார். இவர்கள் தவிர, பைக்கான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா மற்றும் பெப்சிக்கோவின் முன்னாள் சிஇஓ இந்திரா நூயி ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.