ஜொமாட்டோ நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 138 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த காலாண்டில், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த கிரிக்கெட் போட்டி நிகழ்வின் போது, அதிக எண்ணிக்கையிலான உணவு ஆர்டர்கள் பதிவானதாகவும், இதுவே அதிக லாபத்துக்கு வழி வகுத்ததாகவும் ஜொமாட்டோ தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், ஜொமாட்டோ நிறுவனத்தின் நிகர லாபம் 138 கோடி ஆகும். இதுவே, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 347 கோடி அளவில் நிகர இழப்பு பதிவாகி இருந்தது. நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு, உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மிக முக்கிய பங்கு வகித்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 3288 கோடியாக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 3383 கோடியாக அதிகரித்துள்ளது.