டிசம்பர் 23 முதல் ஜொமாட்டோ நிறுவனம் பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான சென்செக்ஸில் இடம்பிடிக்க உள்ளது. இந்த செய்தியை தொடர்ந்து ஜொமாட்டோ பங்குகள் 7% உயர்ந்து ₹282.85 என்ற புதிய உச்சத்தை தொட்டது. சென்செக்ஸில் இருந்து ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக ஜொமாட்டோ நிறுவனம் சேர்க்கப்பட உள்ளது. இந்த மாற்றம் குறித்து பிஎஸ்இ துணை நிறுவனமான ஏசியா இன்டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த ஒரு வருடத்தில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்கு விலை 130% உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் சென்செக்ஸ் குறியீடு 20% மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு மாறாக, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் பங்கு விலை 27% உயர்ந்துள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டின் நிகர லாபம் 389% உயர்ந்து ₹176 கோடியாகவும், வருவாய் 69% உயர்ந்து ₹4,799 கோடியாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜொமாட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு ₹2.3 லட்சம் கோடியாக உள்ளது.