பிளாட்பார்ம் கட்டண உயர்வுக்கு பிறகு புதிய உச்சம் தொட்ட ஜொமாட்டோ பங்கு மதிப்பு

July 15, 2024

ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 4% அளவுக்கு மேல் உயர்ந்துள்ளன. அதன்படி, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 232 ரூபாய் அளவில் உள்ளது. கடந்த ஓராண்டு அடிப்படையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 175% உயர்த்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. பெங்களூரு, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பிளாட்பார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, நிறுவனத்தின் […]

ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 4% அளவுக்கு மேல் உயர்ந்துள்ளன. அதன்படி, வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளன. மும்பை பங்குச் சந்தையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 232 ரூபாய் அளவில் உள்ளது. கடந்த ஓராண்டு அடிப்படையில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 175% உயர்த்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பெங்களூரு, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பிளாட்பார்ம் கட்டணம் ஒரு ஆர்டருக்கு 6 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பிறகு, நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்துள்ளது. பங்குகள் உயர்ந்துள்ளதால் ஜொமாட்டோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 லட்சம் கோடி என்ற இலக்கை தாண்டி உள்ளது. அதன்படி, ஜொமாட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபேந்தர் கோயல் கோடீஸ்வரராக மாறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu