மூன்றாவது முறையாக ஸ்வரேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்று வரும் மூனீச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.
அதிரடியான ஆட்டத்தில், ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியுடன் மூன்றாவது முறையாக அவர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், இன்று ஸ்வரேவின் பிறந்த நாளான நிலையில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது, இது அவருக்கு சிறப்பான பரிசாக அமைந்துள்ளது.