ஊபர் நிறுவனமானது பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாகன போக்குவரத்து சேவைகளை உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஊபர் டெக்னாலஜிஸ் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாகன போக்குவரத்து, உணவு விநியோகம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு சேவைகளை உலகம் எங்கும் உள்ள பல்வேறு நாடுகளில் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தின் கொல்கத்தாவில் மக்களுக்காக பேருந்து சேவையை தொடங்கப் போவதாக அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயணத்தடங்களின் வழியாக அதிக மக்கள் வசிக்கும் இடங்களை மாநிலத்தின் பிற மாவட்டங்களுடன் இணைக்க உள்ளது. இதில் முதல் கட்டமாக 10 பேருந்துகளுடன் இயங்கவுள்ள இந்த சேவையை அடுத்த வருட மார்ச் மாதம் 60 ஏர் கண்டிஷன் வசதியுடன் இயக்க உள்ளது. இதில் 19 முதல் 50 பயணிகள் வரை பயணம் செய்யலாம். இதற்காக சுமார் 84 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐம்பதாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளது. இதில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 24 மணி நேர பாதுகாப்பு, வசதியான இருக்கைகள் உள்ளிட்ட பல சேவைகள் உள்ளடங்கி உள்ளது.