கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு

August 2, 2022

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி வெளியாகியுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இது […]

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற பல்வேறு பிரிவுகளை சேர்ந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பொறியியல் படிப்புகளுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி வெளியாகியுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில், 163 கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu