சந்திரயான் 3 - ராக்கெட் ஏவுதலுக்கான கவுண்டவுன் இன்று தொடக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய நிலவு திட்டமான சந்திரயான் 3 நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2:35 மணிக்கு, எல் வி எம் 3 எம் 4 ராக்கெட் மூலம், சந்திரயான் 3 கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்டவுன் இன்று மதியம் தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, சந்திரயான் 2 திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. குறிப்பாக, நிலவு […]

இந்தியாவின் மிகப்பெரிய நிலவு திட்டமான சந்திரயான் 3 நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான கவுண்டவுன் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நாளை மதியம் 2:35 மணிக்கு, எல் வி எம் 3 எம் 4 ராக்கெட் மூலம், சந்திரயான் 3 கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட கவுண்டவுன் இன்று மதியம் தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு, சந்திரயான் 2 திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. குறிப்பாக, நிலவு லேண்டர் இலகுவாக தரை இறங்கவில்லை. எனவே, இந்த முறை, இது தொடர்பான குறைகள் களையப்பட்டு, வெற்றிகரமாக திட்டம் நிறைவேற்றப்படும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதிகளில் சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, விண்வெளி துறையின் எலைட் நாடுகள் பட்டியலில் இந்தியா இணையும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இஸ்ரோ அதிகாரிகள் திருப்பதிக்கு சென்று, ராக்கெட்டின் சிறிய வடிவ மாதிரியுடன் திட்டத்தின் வெற்றிக்காக வழிபாடு செய்தனர். இது ஒவ்வொரு ராக்கெட் ஏவுதல் போதும் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu