சாட் ஜிபிடி பிளஸ் சேவையில் புதிய பயனர்களை சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் சாம் அல்ட்மேன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பயனர் எண்ணிகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு காரணமாக, ஓபன் ஏஐ நிறுவனத்தால் அதனை சீராக நிர்வகிக்க முடியவில்லை. எனவே, தற்காலிகமாக, புதிய பயனர்களை இணைக்கும் நடவடிக்கை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாம் அல்ட்மேன், தனது எக்ஸ் பதிவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். மேலும், சாட் ஜிபிடி பிளஸ் சேவையில் பல்வேறு புதிய மேம்படுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.