தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பங்கில் ரூ.4,758 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு

August 10, 2022

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பகிர்வாக 4,758 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்தியஅரசு விடுவித்திருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு தொகையாக இந்த மாதம் இரண்டு தவணையும் சேர்த்து ஒரே தவணையாக ரூபாய் 1.16 கோடியை மத்தியஅரசு விடுவித்திருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூபாய் 58,332 கோடி நிதி விடுவிக்கப்படும். குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு வரி பணம் அளிக்கப்பட வேண்டும் என்று […]

தமிழகத்திற்கு வழங்கவேண்டிய வரி பகிர்வாக 4,758 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது.

மாநிலங்களுக்கு இரண்டு தவணை வரி பகிர்வாக 1.16 லட்சம் கோடி மத்தியஅரசு விடுவித்திருக்கிறது. பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்வு தொகையாக இந்த மாதம் இரண்டு தவணையும் சேர்த்து ஒரே தவணையாக ரூபாய் 1.16 கோடியை மத்தியஅரசு விடுவித்திருக்கிறது. வழக்கமாக மாதாந்திர தவணையாக ரூபாய் 58,332 கோடி நிதி விடுவிக்கப்படும்.

குறிப்பாக, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு வரி பணம் அளிக்கப்பட வேண்டும் என்று நிதிக்குழு ஒரு பரிந்துரை வழங்குகிறது. அந்த பரிந்துரையின் அடிப்படையில் , வரி பகிர்வானது மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்திற்கு இரண்டு தவணைகளையும் சேர்த்து 4,758 கோடி ரூபாயை மத்தியஅரசு விடுவித்திருக்கிறது. மாநிலங்கள் தங்களுடைய முதலீட்டு மற்றும் இதர செலவினங்களை துரிதப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மாநிலங்களை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மத்தியஅரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu