இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழா, நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இவ்விழாவை, திருவிழாவாக ஒவ்வொரு வீடுகளிலும் கொண்டாட வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி, அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியேற்றி கொண்டாட அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 'இல்லந்தோறும் மூவர்ணம்' எனும் பிரசாரத்தை, மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் தேசியக் கொடிகளை விற்கும் பணி, அஞ்சல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில், தேசியக் கொடி விற்பனை துவக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக் கொடியின் விலை 25 ரூபாய் ஆகும். தேசிய கொடியை மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்க பொதுமக்கள், நலச்சங்கத்தினர், தன்னார்வலர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும், www.epostoffice.gov.in என்ற வலைதளத்திலும் ஆர்டர் செய்து, ஆன்லைன் வாயிலாகவும் வாங்கலாம் என, சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.