பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயர சிலை

August 9, 2023

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமாக பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் சிலை அமைக்கப்பட உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மலை நகரமாக இருக்கும் லவாசா சிட்டி சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனமான டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்னும் நிறுவனம் பயணிகளை கவரும் விதமாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய […]

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை விட உயரமாக பிரதமர் மோடிக்கு 200 மீட்டர் உயரத்தில் புனே நகரில் சிலை அமைக்கப்பட உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மலை நகரமாக இருக்கும் லவாசா சிட்டி சுற்றுலா தளமாக உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு இந்த நகரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனமான டார்வின் பிளாட்பார்ம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் என்னும் நிறுவனம் பயணிகளை கவரும் விதமாக பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய சிலையை நிறுவ முடிவு செய்திருக்கின்றது.

இந்த சிலை குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல்- யின் சிலையை விட அதிகமாக உயரமாக கட்டப்படவுள்ளது. இது 120 முதல் 200 மீட்டர் வரை உயரம் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இது நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை போற்றும் வகையில் அமையும் என கூறியுள்ளனர்.

இந்த சிலை திறக்கப்பட்ட பின் இதுவே உலகின் மிகவும் உயரமான சிலையாக கருதப்படும். இந்த சிலை அமைக்கப்படும் வளாகத்தில் நாட்டின் பாரம்பரியம், புதிய இந்தியாவின் திட்டங்கள், கண்காட்சி கூடம் ஆகியவை இடம் பெற உள்ளன. மேலும் இதில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரையிடப்பட இருக்கின்றன. டிசம்பர் மாத இறுதிக்குள் கட்டி முடித்து திறந்து வைக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் திறப்பு விழாவிற்கு பிரான்ஸ், சவுதி அரேபியா, அமெரிக்கா,இஸ்ரேல் நாட்டு தூதர்களை அழைக்கவும் திட்டமிட்டு இருக்கின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu