பிரிட்டன் நாட்டில் பிப்ரவரி மாத பணவீக்கம் 10.4% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்களின் விலைகள் வருடாந்திர அடிப்படையில் 18.2% உயர்வை பதிவு செய்துள்ளன. இது, 1970 களுக்குப் பிறகு பதிவாகும் உயர்ந்த பட்ச விலை என்பது குறிப்பிடத்தக்கது. உணவுப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் அமைப்பு தெரிவித்துள்ளது. அதே வேளையில், பிரிட்டனுக்கு உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யும் ஸ்பெயின், மொரோக்கோ உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை சாதகமானதாக அமையவில்லை என்பதால் இவ்வாறு நேர்ந்து உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. பணவீக்கம் உயர்ந்துள்ள காரணத்தால், பிரிட்டன் வங்கிகளில், வட்டி விகிதங்கள் 4% இருந்து 4.25% ஆக விரைவில் உயர்த்தப்படும் என்று கருதப்படுகிறது.