மெட்ரோ ரயிலில் சிங்காரச் சென்னை பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசு பொருள் வழங்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இன்று வரை 24 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மெட்ரோ ரயில்களில் சிங்காரச் சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 15.12.2023 முதல் 15.03.2024 வரை மூன்று மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் 40 பயணிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பரிசு பொருள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைத்து வழங்கப்பட்டு வருகிறது. இதில் முதல் மாதம் 15.12.2023 முதல்
14.01.2024 வரை, இரண்டாவது மாதம் 15.01.2024 முதல் 14.02.2024 வரை, மூன்றாவது மாதம் 15.02.2024 முதல் 15.03.2024 வரை தேர்ந்தெடுக்கப்படும் பயணிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். இது பயணிகளின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையிலும், பயணிகளை ஊக்கவிக்கவும் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளை கேட்டுக் கொண்டுள்ளது.