பாகிஸ்தான் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 10 போலீசார் பலி

February 5, 2024

பாகிஸ்தானில் காவல் நிலையம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 10 போலீசார் பலியாகினர். பாகிஸ்தானின் கைபர் பத்துன்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டம் உள்ளது. இங்கு தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கையெறி குண்டுகள் மூலம் […]

பாகிஸ்தானில் காவல் நிலையம் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தியதில் 10 போலீசார் பலியாகினர்.

பாகிஸ்தானின் கைபர் பத்துன்வா மாகாணத்தில் டெரா இஸ்மாயில் கான் மாவட்டம் உள்ளது. இங்கு தராபன் தாலுகாவில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையத்தில் இருந்த 10 போலீசார் பலியாகினர். ஆறு பேர் காயமடைந்தனர். பயங்கரவாதிகள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கையெறி குண்டுகள் மூலம் கடும் தாக்குதல் நடத்தினர். அதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதற்கு காவல்துறை சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் அது அதிகாலை நேரம் என்பதால் அவர்கள் தப்பி ஓடி விட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போது போலீசார் அப்பகுதியை சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர். இதற்காக அதிகப்படியான வீரர்கள் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

வரும் எட்டாம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu