நாடு முழுதும் 100 விமான நிலையங்கள்; மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

September 16, 2022

நாடு முழுதும், 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என, விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறினார். இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி - காஷ்மீர் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு, கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர். ஆறாயிரம் […]

நாடு முழுதும், 100 விமான நிலையங்கள் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என, விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறினார்.

இதுகுறித்து விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் கூறுகையில், பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில், கன்னியாகுமரி - காஷ்மீர் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு, கன்னியாகுமரி அருகே நரி குளத்தில் உள்ள பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

ஆறாயிரம் ஆண்டுகளாக இந்தியா மதச்சார்பற்ற தன்மையுடன் தான் உள்ளது. 'பாரத் ஜோடோ' யாத்திரையில் அரசியலையும், மதத்தையும் ராகுல் இணைத்துள்ளார். இந்த யாத்திரையின் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கிறார்.

நாடு முழுதும், 100 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை, 65 விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில அரசு இடம் வழங்கினால் குமரியில் விமான நிலையம் அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.


0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu