நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 100 மருத்துவக் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் புதிய மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. ஏற்கனவே, 3 கட்டங்களாக 157 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், 4ம் கட்டமாக 2027ம் ஆண்டுக்குள் மேலும் 100 மருத்துவ கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத 100 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு, மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.325 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதில் மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்குகின்றன. இந்த தொகைக்கு மத்திய செலவின நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.