அரசு கலை கல்லூரிகளில் கணினி பயிற்றுநர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.10 ஆயிரம்

December 6, 2022

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 423 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த தொகுப்பூதியம் மாதம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் ஒரு கல்வியாண்டின் 11 மாதங்களுக்கு […]

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணினி அறிவு பயிற்றுநர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கணினி அறிவு பயிற்சி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 423 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாத தொகுப்பூதியமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த தொகுப்பூதியம் மாதம் ரூ.10 ஆயிரமாக வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு கல்வியாண்டின் 11 மாதங்களுக்கு இந்த தொகுப்பூதியம் வழங்கப்படும் எனவும், இத்திட்டத்தின்கீழ் புதிய பயிற்றுநர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது எனவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu