நாட்டின் பொருளாதார நெ௫க்கடிக்கு ஆளும் கட்சியே காரணம் - இம்ரான்கான்

August 1, 2022

Pakistan Tehreek-e-Insaf (PTI) ன் தலைவ௫ம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் ஆன இம்ரான்கான் பஞ்சாப் இடைத்தேர்தலில் PTI வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூனிஸ் இலாஹி ஆகியோரை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்தார். அங்கு பஞ்சாபின் அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் விவாதித்தார். தேர்தல் வரவி௫க்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளான PTI மற்றும் PLMQ வில் இருந்து பல உறுப்பினர்கள் பஞ்சாப் அமைச்சரவை இலாகாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டதாக […]

Pakistan Tehreek-e-Insaf (PTI) ன் தலைவ௫ம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் ஆன இம்ரான்கான் பஞ்சாப் இடைத்தேர்தலில் PTI வெற்றி பெற்றதை தொடர்ந்து பஞ்சாப் முதல்வர் சவுத்ரி பெர்வைஸ் இலாஹி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூனிஸ் இலாஹி ஆகியோரை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்தார். அங்கு பஞ்சாபின் அரசியல் சூழ்நிலை குறித்து அவர்களிடம் விவாதித்தார். தேர்தல் வரவி௫க்கும் நிலையில், கூட்டணிக் கட்சிகளான PTI மற்றும் PLMQ வில் இருந்து பல உறுப்பினர்கள் பஞ்சாப் அமைச்சரவை இலாகாக்களுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.எனவே சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை ஏற்பாடுசெய்தார். அக்௯ட்டத்தில் பேசிய இம்ரான் நாட்டில் நிலவும் பொருளாதார நெ௫க்கடிக்கு ஆளும் கட்சியே காரணம் என்றார். மேலும், தலைமை தேர்தல் ஆணையர் (CEC) சுல்தான் சிக்கந்தர் ராஜா உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அடுத்த தேர்தலுக்காக ஏற்பாடுகளைச் செய்யுமாறு கட்சி உறுப்பினர்களை அறிவுறுத்தினார். மேலும் இம்ரான் கான், பஞ்சாபின் முன்னாள் சுகாதார அமைச்சர் யாஸ்மின் ரஷீத்துக்கு கட்சி மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இரண்டு வார கால அவகாசம் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu