தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வுக்கு 4.56 லட்சம் மாணவியர் உட்பட 9.23 லட்சம் பேரும்; புதுச்சேரியில் 7655 மாணவியர் உட்பட 15 ஆயிரத்து 566 பேரும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 13 ஆயிரத்து 151 மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதில் கூடுதல் நேர சலுகை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்காக தமிழகத்தில் 3976; புதுச்சேரியில் 49 என 4025 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 20ம் தேதியுடன் அனைத்து பாடங்களுக்கும் தேர்வுகள் முடிகின்றன.