இலங்கையில் கனமழை காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக இலங்கையில் கனமழை பரவியுள்ளது. தொடர்ந்த மழை வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கிழக்கு கடலோர பகுதிகளில். இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 8 பேர் அம்பாறை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பான இடங்களில் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை அதிபர் ராணுவத்தை அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இது கிழக்கு மாகாணத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.