தமிழகத்தில் 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க முடிவு

November 30, 2022

தமிழகத்தில் 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் - கங்கை முத்து மாரியம்மன், சங்கராபுரம் - ராஜநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் - சந்திரலிங்கம், காளியம்மன் உள்ளிட்ட 138 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மாநில அளவிலான வல்லுநர் […]

தமிழகத்தில் 138 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொன்மையான திருக்கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 46-வது வல்லுநர் குழு கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் - கங்கை முத்து மாரியம்மன், சங்கராபுரம் - ராஜநாராயண பெருமாள், திருவண்ணாமலை மாவட்டம் - சந்திரலிங்கம், காளியம்மன் உள்ளிட்ட 138 திருக்கோயில்களில் திருப்பணிகள் தொடங்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து மாநில அளவிலான வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu