கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 58,545 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. இதில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதனால் பெங்களூரு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடை இன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும். மேலும், பெங்களூரு முழுவதும் மதுபான விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.