பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகளிலும் 2 கட்டமாக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதில் முதல் கட்ட தேர்தலில் பெங்களூருவில் உள்ள மூன்று பாராளுமன்ற தொகுதிகள் உட்பட்ட 14 தொகுதிகளுக்கும், இரண்டாவது கட்டத் தேர்தலில் 14 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் தற்போது ஆபாச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வால்
ரோவண்ணா பா. ஜனதா கூட்டணியின் ஜனதா தளம் சார்பில் ஹசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். பாராளுமன்ற தேர்தல் முடிவு அடைந்ததை அடுத்து நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருப்பதை தவிர்க்கும் பொருட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.