அண்மையில், கயானா நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் பயங்கர தீ விபத்து நேர்ந்தது. இந்த விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டதில், இந்த விபத்திற்கு காரணமாக 14 வயதுடைய மாணவி சந்தேகிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகப்படும் மாணவியின் கைபேசியை, பள்ளி அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவி, கட்டிடத்தில் தீ வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது. அவர் தீ வைத்துக் போது, அந்த அறையின் அதிகாரப் பெண்மணி உறங்கிக் கொண்டிருந்ததாகவும், தாமதமாகவே அவர் கதவை திறந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. எனவே, இந்த விபத்தில் 19 குழந்தைகள் உயிரிழக்க நேரிட்டது. அதில் அந்த பெண்மணியின் 5 வயது மகனும் ஒருவராவார். மேலும், குற்றம் செய்ததாக கருதப்படும் மாணவியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர், அவர் சிறார் தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.