வதந்தியால் ஏற்பட்ட கலவரம் - பப்புவா நியூ கினியாவில் 15 பேர் பலி

January 12, 2024

பப்புவா நியூ கினியா நாட்டில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு சம்பள குறைப்பு செய்யப்படுவதாக போலியான செய்தி பரவியது. இதையடுத்து, பப்புவா நியூ கினியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தலைநகர் மோர்ஸ்பியில் உள்ள கடைகளை பலரும் சூறையாடத் தொடங்கினர். இதில் கலவரம் […]

பப்புவா நியூ கினியா நாட்டில் சமூக ஊடகங்களில் பரவிய வதந்தி காரணமாக கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களில், அரசு ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு சம்பள குறைப்பு செய்யப்படுவதாக போலியான செய்தி பரவியது. இதையடுத்து, பப்புவா நியூ கினியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சமயத்தில் தலைநகர் மோர்ஸ்பியில் உள்ள கடைகளை பலரும் சூறையாடத் தொடங்கினர். இதில் கலவரம் வெடித்து, உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அரசாங்கம், ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என விளக்கம் அளித்துள்ளது. மேலும், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும், அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu