18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
18-வது சீசன் ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலம் வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதிஅரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மொத்தம் 1,574 வீரர்கள், அதில் 1,165 இந்தியர் மற்றும் 409 வெளிநாட்டவர், இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். 48 இந்தியர்களும், 320 சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் இதில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து பலவகை வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர்.இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சம் 25 வீரர்களை தேர்ந்தெடுக்க முடியும். தக்க வைத்துள்ள 46 வீரர்களுடன், 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்பவேண்டும்.